districts

img

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 12-

    முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட நெடுஞ்சாலை கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை யின் சார்பில் கள்ளக்குறிச்சி- கச்சிராய பாளையம் நெடுஞ்சாலையில் குதிரை சந்தை கிராமத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர்  திங்களன்று (ஜூன்12) தொடங்கி வைத்தார்.

   இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகை யில்,“  திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்கள் மற்றும்  மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், இதர சாலை களில் வேம்பு, மகிழம், புங்கன், நாவல்,  பூவரசு, புலியன், நீர்மருது உள்ளிட்ட பல்வேறு வகையை சார்ந்த தலா 3 ஆயிரம் மரக்கன்றுகள் தொடர்ந்து நடப் படும்”என்றார்.

    கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் நெடுஞ்சாலையில் குதிரைசந்தல் கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரமாகவும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பழக்கன்றுகள் மற்றும் விதை தொகுப்புகள் 100 நபர்க ளுக்கு வழங்கியுள்ளோம். நெடுஞ்  சாலைத்துறையில் நடப்பட்டுள்ள மரக் கன்றுகளை அலுவலர்கள் முறையாக பராமக்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

   இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கோட்ட பொறி யாளர் முரளி, உதவி கோட்ட பொறி யாளர் மணிமொழி, உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.