திருவண்ணாமலை, ஆக.24-
ஆஷா தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என திரு வண்ணாமலை பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் வேங்கிக்கால் முத்தம்மாள் நகரில் நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார், செல்வி வரவேற்றார், துணைச் செய லாளர் சிலம்பரசி அஞ்சலி தீர்மானம் வசித்தார், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன் சங்க கொடி ஏற்றி துவக்க உரை யாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எம். பார்வதி செய லாளர் அறிக்கையும், பொருளாளர் விஜயா வரவு, செலவு அறிக்கையை சிஐடியு மாவட்டச் தலைவர் கே. காங்கேயன், மாவட்டச் செயலாளர் இரா.பாரி, துணைத் தலைவர் பி.கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாநிலத் தலைவர் டெய்சி நிறைவுறை யாற்றினார், துணை செயலாளர் சத்திய வாணி நன்றி கூறினார்.
ஆஷா ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு போக்குவரத்து படி வழங்க வேண்டும், பணிக்கொடை இறப்பு நிதியாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், கொரோனா களப்பணி ஊக்கத்தொகை ரூ.20,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆட்சியரிடம் முறையிடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆஷா மாநில செயலாளர் சீதாலட்சுமி, மாநில இணைச் செயலாளர் ரோஜா, மாவட்ட செயலாளர் ரீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.