districts

img

அரியூர் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறந்து நடத்தவேண்டும்: சிஐடியு தீர்மானம்

வேலூர் மார்ச் 23 - 2024 மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்ட சிஐடியு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் வேலூரில் மாவட்ட துணை தலைவர் எம்.காசி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வி.நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் எஸ் பரசுராமன் பேரவையை துவக்கி வைத்தும், மாநில குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன்  நிறைவு செய்தும் பேசினர். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் முக்கிய தொழில்களான பீடி, டேனரி, கைத்தறி, தீப்பெட்டி தொழில்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய மோடி அரசை தோற்கடிக்க இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீடி தொழிலாளர்களையும் பீடித்தொழிலையும் பாதுகாத்து, குறைந்த பட்ச பென்சன் ரூ. 3000 வழங்க வேண்டும், நலிவடைந்த வரும் டேனரி தொழிலை மீண்டும் புத்துயிர் பெற செய்ய வேண்டும். திருப்பத்தூரில் சந்தன தொழிற்சாலையையும், அணைக்கட்டில் சென்ட் தொழிற்சாலைகளும் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை மக்களவை தேர்தல் வேட்பாளர்களிடம் வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.