ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம். எஸ். தரணி வேந்தனுக்கு ஆதரவாக வந்தவாசியில் பஜார் வீதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தி வெளியே வந்த இஸ்லாமிய மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது நகர செயலாளர் ஆ.தயாளன், நகராட்சி தலைவர் எச். ஜலால், துணைத் தலைவர் க. சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் அப்சர்லியாகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.