திருவண்ணாமலை, பிப்.13- தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுவின் முடிவின்படி திருவண்ணாமலை கோட்ட பொறியாளரிடம் கோரிக்கை முறையீடு செய்யும் இயக்கம் நடைபெற்றது . சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், சாலை பணியாளர்கள் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள சாலை பராமரிப்பு பணிகளில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, தமிழக முதலமைச்சர் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்களுக்கு கோட்ட பொறியாளர் அலுவலகம் மூலமாக முறையீடு மனு அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் ஜி. முருகன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஏ.ஏழுமலை, உட்கோட்ட தலைவர் கணபதி, மற்றும் மாநில செயலாளர் மா. மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.