கார்ப்பரேட்டுக்கு ஆதரவான ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை பெரணமல்லூர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்டார செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், இடைக் குழு உறுப்பினர்கள் பி.கே.முருகன், ராஜசேகரன், தவிச ஒன்றிய தலைவர் பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர் கௌதம் முத்து, ராமதாஸ்(வாலிபர்சங்கம்) ஆகியோர் பேசினர்.