கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் , 88-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, விளையாட்டு மைதானம், நவீன ஸ்கேட்டிங் மைதானம், செயற்கை நீரூற்று, பாடி மேம்பாலம் அருகே பொது கழிப்பிடம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை அமைச்சர்கள் .பி.கே.சேகர்பாபு .கா.ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் மரக்கன்றுகளை நட்டுவைத்து 1000 மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.