districts

img

சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து உயிரிழப்பு!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் - உமாதேவி தம்பதியர். இவர்களுக்கு 11 மாதத்தில் அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்றிரவு கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டினுள் தரையில் மூவரும் படுத்துத் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு தம்பதியர் எழுந்து பார்த்த போது அருகில் இருந்த குழந்தைக் காணவில்லை பின்னர் வெளியே சென்று பார்க்கும் போது குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிடையந்தனர். இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.