புதுச்சேரி, டிச.20- புதுச்சேரி இலாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை பெங்க ளூருவில் இருந்து 74 பயணிகளுடன் இண்டிகோ தனியார் விமானம் வந்தடைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி யுள்ள விமான சேவை தொடங்கியுள்ளதால் அந்த விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு விமான சேவையைத் தொடங்கி வைத்து பயணி களுக்கு மலர்க்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு 63 பயணிகளுடன் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற விமானத்தை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர். விழாவில் அமைச்சர் சாய் ஜெ.சர வணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர் (சுற்றுலா) ஜெயந்தகுமார் ரே, சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜ சேகரரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்து தினசரி காலை, 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 12.25 மணிக்கு, புதுச்சேரியை வந்தடையும். புதுச்சேரியில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும் புதுச்சேரியில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் விமானம் மதியம், 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். ஐதராபாத்தில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.