மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கூலி பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆற்காடு வட்டார தலைவர் டி. விஜயன் தலைமையில் திங்களன்று (பிப். 10) சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. சந்திரன், செயலாளர் பி. ரகுபதி, ஆற்காடு வட்டார செயலாளர் ஜி. மதியழகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.