districts

img

மாற்றி அமைக்கப்படுமா மின் கம்பம்?

விழுப்புரம்,டிச.14- விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திற்குட்பட்ட  குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகரில், வீடுகளுக்கு அருகே உள்ள சிமெண்ட் மின் கம்பம் ஒன்று கடந்த மூன்று மாத காலமாக பழுதடைந்த நிலையில், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால் கட்டுமான கம்பிகள் தெரியும் நிலையில் பலவீனமாக உள்ளது. இதனால், அந்த மின் கம்பத்தின் அடிப்பகுதி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி, அந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

;