கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை
கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை சென்னை,பிப்.25- சென்னை கடற்கரை யில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரி யில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 ஆகிய நேரங்க ளில் புறப்படும் தாம்ப ரம் செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரி யில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப் பட்டு சென்னை கடற்கரை வந்தடையும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக் கோரிக்கை
சென்னை, பிப்.25 - ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கத்தின் வேப்பேரி பகுதி 17வது மாநாடு ஞாயிறன்று (பிப்.25) புரசைவாக்கத்தில் நடைபெற்றது. ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசே ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதி தலைவர் எஸ்.ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். மாநாட்டை சிஐடியு மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ம.உதயகுமார் தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் ஆர்.அருணாச்சலம் வேலை அறிக்கையும், பொருளாளர் என்.சுந்தர்ராஜ் வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆர்.கபாலி, சிபிஎம் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், வியாபாரிகள் சங்க தலைவர் பி.கே.மூர்த்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.பிரபாகரன், பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். பகுதி நிர்வாகிகள் ஏ.ஆரோக்கியதாஸ் வரவேற்றார். பி.ஏழுமலை கொடியேற்றினார். வி.ஜெகதீசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஜி.உமாசங்கர் நன்றி கூறினார். நிர்வாகிகள் வேப்பேரி பகுதி தலைவராக எஸ்.சிவக்குமாரும், செயலாளராக ஆர்.அருணாசலுமும், பொருளாளராக ஜி.உமாசங்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெள்ளத்தடுப்பு பணிகள் தலைமைசெயலர் ஆய்வு
வெள்ளத்தடுப்பு பணிகள் தலைமைசெயலர் ஆய்வு சென்னை,பிப்.25- “அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடி கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலி ருந்து மழைநீர் வெளியேறாமல் ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும்” என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஞாயிறன்று (பிப்.25) அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சர்வதேச வாட்டர் எக்ஸ்போ சென்னையில் பிப்.28 துவக்கம்
சென்னை, பிப். 25- வாட்டர் டுடேயின் வாட்டர் எக்ஸ்போ 2024 ன் 17வது பதிப்பு பிப்.28 முதல் மார்ச் 1 ந்தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட சர்வதேச வாட்டர் எக்ஸ்போ கண்காட்சியில் 200 கண்காட்சி யாளர்கள், 8000 பார்வையாளர்கள், 10 நாடுகள், 6000 பரப்பு சதுர மீட்டர் கண்காட்சி பகுதி, 175 ரகங்களில் கண்காட்சி திட்டங்கள் 5000 புதிய தயாரிப்புகள் பார்வைக்கு வைக் கப்படும். 100 மாநாட்டு பிரதிநிதிகள், 40 மாநாட்டுப் பேச்சாளர் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, வாட்டர் டுடே இயக்குநர் எஸ்.சண்முகம் பேசுகையில், ‘‘2024ல், பல சுயதொழில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நம்பிக்கையூட்டும் நீர் மற்றும் கழிவு நீர் சம்பந்தப்பட்ட தொழில் செய்ய விரும்பு கின்றன. அதேசமயம் இதன் சாதனை தொழில்துறை மற்றும் வாங்குபவர்கள் தங்கள் நிலையை மீண்டும் உறுதிப்படுத்த இந்த கண்காட்சி தளத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். வாட்டர் எக்ஸ்போ, உற்பத்தியாளர்கள் மற்றும் விநி யோகஸ்தர்களை வாங்குபவர்கள், தொழில் வல்லுநர்கள், டீலர்கள், நகராட்சிகள், ஒப்பந் ததாரர்கள் மற்றும் பல தொழில் துறை களைச் சேர்ந்த முடிவெடுக்கும் திறன் கொண்ட நிபுணர்கள் இணைக்கும் ஒரு பயனுள்ள வணிக மையமாக இந்த கண் காட்சி செயல்படும். சாக்கடை உள்கட்டமைப்பு, தொழிற் சாலை நீர் மற்றும் கழிவுநீர் சுகாதாரம், சுற்றுச் சூழல் சேவைகள், நீரின் தரம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு நீர் மற்றும் கழிவுநீர் துறைகளில் உபகர ணங்கள், தொழில்நுட்பங்கள் தயாரிப்பு கள் மற்றும் செயல்முறைகளின் உற்பத்தி யாளர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பா கும் என்றார். தொழிற்சாலை கசடு மேலாண்மை, திறமையான நீர் மேலாண்மை போன்ற திட்டங்களில் புதிய முறைகள் காட்சி ப்படுத்தப்படும்.