கள்ளக்குறிச்சி, ஜூன் 16- ‘
60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட வேண்டும்’என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், 40 கி.மீக்குள் சுங்கச்சாவடிகள் அமைத்து, முறைகேடான வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘சாலை வரியை செலுத்தித் தான் வாகனம் வாங்குகிறோம். பிறகு எதற்கு சுங்கக் கட்டணம்’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அதற்கு நெடுஞ் சாலைத்துறையினர்,“நீங்கள் கட்டும் வரி மாநில சாலைகளுக்கு ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்” என்று விளக்க மளிக்கின்றனர்.
அந்த விளக்கத்தின்படியே, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் அல்லது அந்த நெடுஞ்சாலைகளை அமைக்க செலவு செய்யப்பட்ட முதலீட்டை திரும்பப் பெறும் வரை முழுமையான சுங்கக் கட்ட ணம் வசூலிக்க வேண்டும். அதன் பிறகு பராமரிப்பு செல வுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூ லிக்க வேண்டும் என்பது பொது வான விதி. ஆனால் அது நடைமுறையில் பின்பற்றப்படு கிறதா? என்பது கேள்விக் குறி யாகவே உள்ளது.
நடைமுறையில் இருப்பது என்ன? - ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் குறிப்பிட்டத் தேதியில் உயர்த்தப்பட்டு, வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளும் நிலை தான் தற்போது வரை தொடர்கிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இதில் அவ்வப் போது சுங்கச்சாவடிகளின் வசூல் உயர்வு மேலும் பாதிப்படைய வைக்கிறது.
இது ஒருபுறமிருக்க, விழுப்பு ரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடிக்கும், உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடிக்குமான இடைவெளி 48 கி.மீ உள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பில்லூர் அருகே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களிடம் வசூலிக்க வேண்டும் என்ற குறிக் கோளுடன் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடிக்கும், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சுங்கச்சாவடிக்குமான இடை வெளி 39 கி.மீ மட்டுமே. கள்ளக் குறிச்சி நகருக்குள் செல்லும் வாக னங்களிடம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே குறைந்த இடை வெளியில் சுங்கச்சாவடி அமைக்கப் பட்டுள்ளது. அதேபோல் வீரசோழ புரம் சுங்கச்சாவ டிக்கும், சேலம் மாவட்டம் நத்தக்கரை சுங்கச் சாவடிக்குமான இடைவெளி 42 கி.மீ மட்டுமே.
இதுதவிர கடலூர் - சேலம் 532 தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாலகரம் மற்றும் கீழக்குறிச்சி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கடலூரில் இருந்து சேலம் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கீழக்குறிச்சி சுங்கச்சாவடியில் ஒரு கட்டணத்தை செலுத்திவிட்டு, அடுத்த 22 கி.மீட்டர் தொலைவில் நத்தக்கரை சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. “
இதுபோன்ற முறையற்ற கட்டண வசூல் பற்றி எந்த அரசி யல் கட்சியினரும் வாய் திறப்ப தில்லை” என்று ஆதங்கப்படுகிறார் நெய்வேலி லாரி உரிமையாளர் ஸ்ரீராம். ‘60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு குறைவான தொலைவில் 2-வது சுங்கச்சாவடி இருந்தால் அடுத்த 3 மாதங்களில் அது மூடப்படும்’ என்று மத்திய தரை வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் இதுவரை அது போன்று எந்த சுங்கச்சாவடியும் அகற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியாவில் அதிகளவு சுங்கச்சாவடிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. “60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்றால் தமிழ் நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்துவோம்” என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப் பேரவையில் அறிவித்தார். ‘
ஒவ்வொருவரும் அவரவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிடு கின்றனர். சுங்கச்சாவடிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை தேசிய நெடுஞ் சாலை ஆணையம் மேற்கொள்ள வில்லை” என்கிறார்கள் வாகன உரிமையாளர்கள்.
தாம்பரம் - திண்டிவனம் இடையில் நான்கு வழிச்சாலை 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2004 இல் முடிக்கப்பட்டு 2005 ஏப்ரல் முதல் இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தச்சாலை அமைப்பதற்கான செலவு ரூ.536 கோடி. ஆனால் கடந்த 18 ஆண்டுகளில் சுங்கக் கட்டணம் வசூலித்தது ரூ.2,000 கோடிக்கும் அதிகம்.
இந்தச் சுங்கச்சாவடியில் இன்னும் முழு கட்டணத்தை வசூ லிப்பது வழிப்பறி கொள்ளையை விட மோசமானதாக இருக்கிறது என்பது கனரக வாகன உரிமை யாளர்களின் குரலாக உள்ளது.