districts

கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரம், டிச. 24- விழுப்புரம் மாவட்டம், வசந்த கிருஷ்ணா புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து கூலிப்படையி னரால் கொலை மற்றும் கொலைவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலை யத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர் தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கிருபாநிதி, வீரமணி, கோபிநாத் ஆகிய இளைஞர்கள் மீது சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் திட்டமிட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இந்த சம்ப வத்தில் கூலிப்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இச்சம்ப வத்தை கண்டித்தும், உண்மைக் குற்றவாளி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி யும் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங் கள் நடத்தியும் இதுவரை அவர்கள் மீது  கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
கிராம மக்கள் அச்சம் 
அதன் தொடர்ச்சியாக தற்போது வசந்தகிருஷ்ணாபுரத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறு சம்பவத்தில் செல்வராஜ் குடும்பத்தினர் மற்றும் சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் (8 பேர்) மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கண்டாச்சிபுரம் வட்டக்குழு உறுப்பினர் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த 15ஆம் தேதி கொலை வெறித்  தாக்குதல் நடத்தினர். இதனால் வசந்தகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை  சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சமடைந் துள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படை குண்டர்கள்  பயன்படுத்திய காரை அரகண்டநல்லூர் காவல் துறையினர் கைப்பற்றினர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களிடமே காரை ஒப்படைத்துள்ளனர்.
வழக்கு பதியாதது ஏன்?
கூலிப்படையினர் மீது 306இன் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கூலிப்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், பெயரளவில் செல்வராஜ் குடும்பத்தினர் 4 பேர் மீது 506 (2)இன்  கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால்  இதுவரை அவர்களை கைது செய்யவில்லை.  அரகண்டநல்லூர் காவல் துறையினரின் இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவல்துறை உயர்அதிகாரிகள் தலையிடவேண்டும்
எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் 307இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ய வேண்டும், சென்னையை சேர்ந்த கூலிப்பிடையினரை அழைத்து வந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தும் உள்ளூர் ஆதிக்க சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.