districts

பெண்களுக்கு சாதனையாளர் விருது

கடலூர், ஜூலை 10- ‘

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம்’ திட்டம் 2013-2015 ஆண்டில் பிரதமரால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வருகின்ற ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்ட பெண் சாதனையாளர் விருதும் ரூ.10,000 த்திற்கான காசோலையும் கடலூர் மாவட்ட ஆட்சியாளரால் வழங்கப்படவுள்ளது.

     இத்திட்டம் சமூக நலத்துறை மூலம் கடலூர் செயல்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதியான பெண்களிடமிருந்து ஜூலை 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

     எனவே பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டு வரும் பெண்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

;