சென்னை, ஆக. 19- அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் வடசென்னை மாவட்ட 40ஆவது மாணிக்க ஆண்டு பேரவை தலைவர் வே.விஜயகுமரன் தலைமையில் எழும்பூரில் (தோழர் கே.முருகன் நினை வரங்கில்) சனிக்கிழமை (ஆக. 19) நடை பெற்றது. இணைச் செயலாளர் கெ.மகேந்தி ரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி வேலை அறிக்கை யையும், பொருளாளர் ஏழுமலை வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் செயலா ளர் கு.அரிசங்கர், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி, தென் சென்னை மாவட்டத் தலைவர் சி.கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் மு.அன்பரசு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்ன தாக துணைத் தலைவர் ஆ.கோபிநாதன் வரவேற்றார். த.குணசேகரன் நன்றி கூறினார். தீர்மானங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 115, 132, 155 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வணிகவரித்துறையில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டுள்ள பணியிட மாறுதல்களை கைவிட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.