கடலூர், மே 18- கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த வர் காதர்பாஷா (35). டீக்கடை ஒன்றில் வேலை செய்து வரு கிறார். இந்த நிலையில் வெள்ளிக் கிழமை இரவு ரூபாய் 8,000 பணத்துடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலை யில் சனிக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் காதர்பாஷா ரயில் மோதி அடிபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள னர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.