சென்னை, நவ. 9- எர்ணாவூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆர்.ஜெயராமன் சென்னை வடக்கு மேற்பார்வை பொறி யாளரிடம் மனு அளித்தார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கிய லட்சுமி, பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் இருந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவொற்றியூர் மண்டலம் எண்ணூர், எர்ணாவூர் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதி களில் மூன்று மின் பகிர்மான அலுவலகம் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி 4, 6, 7 ஆகிய மூன்று வட்டங்கள் திருவொற்றி யூர் மேற்கு பகுதியாகும். சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எர்ணாவூர் மின் பகிர்மான அலுவல கத்திற்கு உட்பட்ட பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். சாத்தாங் காடு மற்றும் எர்ணாவூர் மின் பகிர்மான அலுவலகத்திற்கு எப்.ஓ.சி. வசதி ஏற்படுத் திக் கொடுக்க வேண்டும். எண்ணூர், எர்ணா வூர் மற்றும் சாத்தாங்காடு மின்சார அலுவல கத்தில் புகார் பதிவு செய்ய தனியாக ஒரு ஊழியரை நியமனம் செய்ய வேண்டும். திருவொற்றியூர் பகுதி முழுவதும் 11 கி.வோ. பிரச்சனைகளை பழுது பார்க்கும் வாகன குழு இல்லை. எனவே வாகன குழு அமைக்க வேண்டும். உயர்மட்ட கம்பி இணைப்புகளை அகற்றி புதைவட கேபிள் அமைக்க வேண்டும். மேற்கு பகுதி முழுவதும் மின் இணைப்பு பில்லர்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் கேபிள் ஒயர்கள் சுற்றப்பட்டுள்ளது. அவற்றை முறைப்படுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.