புதுச்சேரி,அக்.21- புதுச்சேரியில் புழுதி பறக்கும் சாலை யில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் சரவணன், நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, தனஞ்செழியன், லாவண்யா ஆகியோர் நகராட்சி ஆணையரின் உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:- புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை யில் உள்ள பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்காலிக பேருந்து நிலையம் கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் தற்போது சேரும் சகதியுமாக உள்ளது. இந்த நிலை யத்தில் இருந்து வரும் பேருந்துகளால் கடலூர் சாலையில் புழுதி மணல் பறந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் காயமடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துக்களை தடுக்க புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலைய கட்டுமானம் முடியும் வரை கடலூர் சாலையை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.