districts

img

மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் திட்டம்

சென்னை, ஆக.14- எஸ்ஐபி அகாடமி திருவள்ளூர் மாவட்டத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானிலும் 2 மியாவாக்கி காடுகளை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது.   அதன் தொடர்ச்சியாக தற்போது அரியானாவில் மேலும் 2 காடுகளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடையே ஏற்படுத்த அதிக காடுகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிராவின் ஜல்கானில் மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகளை எஸ்ஐபி அகாடமி நட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற காடுகள் அந்தந்தப் பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அகாடமியின் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.