districts

img

அகற்றப்பட்ட வீட்டிற்கு மாற்று வீடு

சென்னை, செப்.24- சாலை அமைக்க அப்புறப்படுத்திய வீட்டு உரிமையாளர்க ளுக்கு மாற்று வீடு வழங்கும் ஆணை வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் இருக்கக் கூடிய ரயில்வே சுரங்கப்  பாதையில் சாலை அமைப்பதற்காக அங்கிருந்த 6 வீடுகள்  அகற்றப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப் ட்டது.இதையடுத்து அவர்களுக்கு  தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக வீடு வழங்கும்  ஆவணம்  சனிக்கிழமையன்று (செப். 24) வழங்கப்பட்டது. இதில் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர்  ஜே.ஜே.எபினேசர், 4ஆவது மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா,  திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ்  பாண்டியன்,  சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், 47ஆவது வார்டு மாமன்ற  உறுப்பினர்  மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.