அம்பத்தூர், ஜூலை 16-
ஆவடியில் திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் பணம், நகையை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் (40) என்பவரிடம் தனது தங்கையின் திருமணத்திற்கு ரூ 30 லட்சம் பணம், 64 சவரன் நகையை வாங்கி உள்ளார். ஆனால் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுபற்றி மும்தாஜ் பேகம் பலமுறை கேட்டும் சதீஷ்குமார் பணம், நகையை கொடுக்கவில்லை இதுகுறித்து மும்தாஜ் பேகம் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.