districts

ஒரு கிலோ சீரகம் ரூ.600க்கு விற்பனை

சென்னை,ஜூலை 6-  

     கோயம்பேடு மளிகை சந்தையில் கிலோ ரூ.250-க்கு  விற்பனை செய்யப்பட்டு வந்த சீரகம் ரூ.600 ஆக உயர்ந் துள்ளது.

    சீரகத்தை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்காக சென்னைக்கு வருகிறது. அங்கு தற்போது விளைச்சல் வெகு வாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வரத்து குறைந்து கடுமையாக விலை உயர்ந்துள்ளது. பாசுமதி அரிசியின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 25 கிலோ கொண்ட ஒரு பை பாசுமதி அரிசி ரூ.1800-ல் இருந்து ரூ.2,600 ஆக அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூ.860-ல் இருந்து ரூ.900 ஆக உயர்ந்துள்ளது

;