districts

img

மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி சேகரிப்பு இயக்கம்

மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வெள்ளியன்று (மார்ச் 9) தி.நகரில் நடைபெற்ற வசூல் இயக்கத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ். வெள்ளைச்சாமி, தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.குமார், சென்னை மாநகர சிறு கடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், நிர்வாகிகள் முஸ்தபா, மணிமாறன், செல்வம், அலி முகமது, தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.