districts

img

ஜவ்வாது மலையில் சிதிலமடைந்த சித்த மருத்துவக் குடியிருப்பு கட்டிடம்

திருவண்ணாமலை,ஆக.4-

     திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் சிதிலமடைந்துள்ள சித்த மருத்துவ குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் சித்த  மருத்துவமனை ஊழியர்களுக்கு குடியி ருப்பு கட்டப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு, எம்ஜிஆர் ஆட்சியில் குடியிருப்புடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது.

    அதன்படி உதவி சித்த மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவ பணியாளர் தங்குவதற்காக 3 வீடுகள் கொண்ட குடி யிருப்பு, சித்த மருத்துவமனையில் இங்கு கட்டப்பட்டுள்ளன. இந்த 3 பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஏதாவது ஒரு பணியிடம் காலியாக இருக்கும். தற்போது, மருத்துவ பணியாளர் பணி யிடம் காலியாக உள்ளது.

    இந்நிலையில், 35 ஆண்டுகளாக உள்ள சித்த மருத்துவர் உள்ளிட்டவர்களின் குடி யிருப்பு கட்டிடம் சிதிலமடைந்து விட்டது.  பொதுப்பணி துறை நிர்வாகம், குடி யிருப்பை சீரமைக்க முன்வரவில்லை. ஜன்னல் கண்ணாடி உடைந்து, மேற்கூரை மற்றும் தரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கிடக்கிறது. இதனால், வசிப்பதற்கு தகுதி யற்ற கட்டிடமாக திகழ்கிறது.

   கட்டிடம் பலவீனமாக உள்ளது, மேற்கூரை பெயர்ந்து விழுந்து விடும் அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர். மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம், சர்வ சாதாரணமாக உள்ள தால் அச்சம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உடல் நலனில் கவனம் செலுத்தி உயிரை பாதுகாக்கும் சித்த மருத்துவ பணி யாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    இதனால், குடியிருப்பில் தங்குவதை உதவி சித்த மருத்துவ அலுவலர், மருந் தாளுநர் மற்றும் மருத்துவ பணியாளர் ஆகி யோர் தவிர்த்துள்ளனர். இவர்கள், தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர்.

    அரசாங்க குடியிருப்பில் தங்க வில்லை  என்றாலும், அவர்கள் ஊதியத்தில் வீட்டு  வாடகை தொகை பிடித்தம் செய்யப்படு கிறது. ஊழியர்களின் நிலைக்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்வது தொடர்கிறது.  

   சித்த மருத்துவமனை குடியிருப்பு கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக் குறியாக உள்ளதால், கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் கோரிக்கை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.