மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கடலூரில் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் ஐக்கியத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் ஏ.எல்.சி. பேராலய போதகர் பீட்டர் பால் தாமஸ் தலைமை தாங்கினார். போதகர்கள் ராபர்ட், ஸ்டீபன் தேவனேசன், ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், திமுக மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், மக்கள் பேரவை நளினி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வல்லரசு, திருமார்பன், சிபிஐ குளோப், தமுமுக பழனி பாரூக், மனிதநேய மக்கள் கட்சி ஷேக் தாவூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்