ராணிப்பேட்டை, செப். 23 - அரக்கோணம் வட்டம், நந்திவேடுதாங்க கிராமத் தைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது80). அவரது அண்ணி சரோஜம் மாள், இவர்களுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு அரசால் 1 ஏக்கர் 15 சென்ட் நிலத்திற்கு பட்டா பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது. இந்த இரு குடும்பங்கள் அப்பகுதியில் ஆடு, மாடு களை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆளே இல்லாத முனுசாமி என்ற பெயரில் தவறுதலாக பட்டா மாறியுள்ளது. இதை அறிந்து அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி - கண்ணப் பன் எனது பெயரில் தான் சொத்து உள்ளது என பவர் பத்திரம் பெற்றுக் கொண்டு இந்த நிலத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் சரவணன், அவரது மனைவி, திருத் தணி தாலுகா கிராம நிர்வாக அலுவலர் பிரியங்கா ஆகியோர் போலியான பத்திரம் தயார் செய்து பிரியங்கா மீது செட்டில் மெண்ட் பத்திரத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இடத்தில் உள்ள வீடு, கொட்டாவை பாமக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆதரவோடு இடிக்க முயற்சித்தனர். அப்பொழுது தடுக்க வந்த வயதானவர்களை ஜேசிபி எந்திரத்தை ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கோவிந் தப்பா மற்றும் அவரது அண்ணி சரோஜா அம்மாள் ஆகியோர் வியாழனன்று (செப். 21) ஊர் பொது மக்களுடன் இணைந்து மாவட்ட சார் பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு வழங்கினர். மக்க ளுக்கு சேவை செய்ய வேண்டிய இடத்தில் உள்ள வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் போலி பத்தி ரத்தை தயார் செய்து சொத்தை அபகரிக்க முயற் சிக்கிறார்கள். அவர்கள் மீது தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.