சிதம்பரம், பிப். 12- சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிக்கும் அப்துல் ரஷீத் என்பவர் திங்களன்று (பிப்.12) அதிகாலை தனது வீட்டு வாசலில் 8அடி நீளம் கொண்ட முத லையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கூச்சலிட்டு அக்கம் பக்கத்தி னரை அழைத்தனர். இது குறித்து சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பெய ரில் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப் பட்ட வீட்டிற்கு வந்து 8அடி நீளமும் 110 கிலோ எடை யும் கொண்ட முதலையை பிடித்தனர். இதனை தொடர்ந்து முதலையை பத்திர மாக சிதம்பரம் அருகே உள்ள வக்ராமரி ஏரியில் விட்டனர். முதலை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.