districts

img

கடலூரில் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது

கடலூரில் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். துணை காவல் கண்காணிப்பாளர் காவ்யா, மாவட்ட குருதி பரிமாற்ற குழு அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து எஸ்.பி ராஜாராம், காவல்துறையினருடன் சேர்ந்து ரத்த தானம் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்  நாம் உயிரோடு இருக்கும்போது அளிப்பது ரத்த தானம் மட்டுமே. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அனைவரும் ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம் செய்தனர். இதில் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், திட்ட மேலாளர் செல்வம், டாக்டர் வினோத் மற்றும் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

;