திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தளபதி பெண்கள் அறிவியல் கலை கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அளவில் 9 மாவட்டங்கள் பங்கேற்ற சீனியர் கைப்பந்து போட்டிகள் மின்னொனியில இரவு-பகல் ஆட்டமாக நடைபெற்றது. திருத்தணி பீகாக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஸ்ரீகிரண் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ. அரி துவக்கி வைத்தார். தளபதி விநாயகம் மகளிர் கல்லூரியின் தாளாளர் எஸ்.பாலாஜி மற்றும் திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் வி குப்புசாமி ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.