districts

ரவுடி கொலையில் 7 பேர் சரண்

திண்டிவனம், ஜூலை 7-

    செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில்  வியாழனன்று (ஜூலை 6) 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியது.

   செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே இரும்புலி யூர் பகுதியில் கடந்த 2016 ஆம்  ஆண்டு நடந்த கொலை யில் 2-வது குற்றவாளியான ரவுடி லோகேஷ்தான் அந்த கொல்லப்பட்ட நபர்  என தெரியவந்த்து.  

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லோகேசை காவல்துறையினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி இறந்தார்.

     கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பாரத் தலை மையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த னர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக தின்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு தாம்பரம் பகுதியை சேர்ந்த  7 பேர் சரண் அடைந்தனர்.

;