districts

img

சென்னையில் 6 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 14 - கழகங்களின் வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்கக்கோரி 6 இடங்களில் போக்கு வரத்து ஊழியர்கள் உண்ணாநிலை போராட் டம் நடத்த உள்ளனர்.

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும், 18 மாதமாக ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள ஓய்வுகால பணப்பலன் களை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 104 மாத அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதை கைவிட வேண்டும்,

காலா வதியான பேருந்துகளை மாற்றாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும், பேருந்து களுக்கு தேவையான உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும், வாரிசு பணியிடங்கள், காலி பணியிடங் களை முழுமையாக நிரப்ப வேண்டும்,

ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜூன் 24ந் தேதி காலை 10 மணி முதல் 25ந் தேதி காலை 10 மணி வரை மாநிலம் முழுவதும் 100 மையங்க ளில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி சென்னையில் பணிமனைகள் தோறும் ஜூன் 11-13 தேதிகளில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பிரச்சாரம் செய்தனர். அண்ணா நகர்  பணிமனையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், “மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஆவடி, அயனாவரம், திருவொற் றியூர், தாம்பரம், திருவான்மியூர், வடபழனி ஆகிய 6 மையங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற உள்ளது” என்றார்.