தொடர் விடுமுறை: பயணிகள் வசதிக்காக 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை, ஜன. 23 - குடியரசு தினம், தைப்பூ சம் என தொடர் விடுமுறை யையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 580 சிறப்பு பேருந்துகள் இயக் கம் இயக்கப்பட உள்ளது. ஜன.26 குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.25 முதல் 28ந் தேதி வரை தொடர் விடு முறை நாட்கள் வருகிறது. இதனால் ஜன.24, 25 தேதி களில் சென்னை கோயம் பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். எனவே, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளு டன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு ஜன.24, 25ந் தேதிகளில் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரி லிருந்து பிற இடங்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஜன.28 அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜன.24 அன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், ஜன.25 அன்று 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையி லிருந்து பயணம் மேற்கொள் வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஜன.28 அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தொலை தூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க லாம். ஜன.25 பௌர்ண மியை முன்னிட்டு திரு வண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 10 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அரசு விரை வுப் போக்குவரத்து கழக மேலான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தில் நுழைந்த நபர்
சென்னை, ஜன.23- குடியரசு தினத்தை யொட்டி செய்யப் பட்டுள்ள உச்சக்கட்ட பாதுகாப்புகளையும் மீறி சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்குள் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து பல மணி நேரம் சுற்றி அலைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் திங்களன்று (ஜன.22) மாலை சுமார் 35 வயதுடைய மர்ம ஆசாமி ஒருவர் திரிந்து கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரமாகப் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் ஒவ்வொரு கவுண்டர்களாகச் சென்று கொண்டிருந்தார். இதைச் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு கேமராவில் பார்த்த அதிகாரிகள், உடனே மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த மர்ம ஆசாமியைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த மர்ம ஆசாமியிடம் விமான டிக்கெட், போர்டிங் பாஸ் எதுவும் இல்லை. அதோடு பி.சி.ஏ.எஸ் வழங்கும் சிறப்பு அனுமதி பாஸும் இல்லை. உச்சக்கட்ட பாதுகாப்பு விதிமுறை அமலில் இருக்கும் போது எந்தவித ஆவணமும் இல்லாமல் இந்த மர்ம ஆசாமி உள்ளே நுழைந்தார் என தெரிய வந்தது. இதை அடுத்து மர்ம ஆசாமியைப் பாதுகாப்பு அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 35) என்பதும், இவருடைய நண்பர்கள் 3 பேர் ஜன. 22 மதியம் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், அவர்களை வழியனுப்ப இவர் சென்னை சர்வதேச விமான நிலையம், புறப்பாடு பகுதிக்கு வந்து உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் நண்பர்கள் 3 பேர் விமான நிலையத்திற்குள் செல்லும் போது பாதுகாப்புப் பணியில் நின்ற 2 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த 3 பேரின் விமான டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பரிசோதித்து உள்ளே அனுப்பினர். அதே நேரத்தில் அவர்களுடன் வந்த ஞானசேகரன், நண்பர்களின் உடைமைகளு டன் கூடிய டிராலியை தள்ளியபடி உள்ளே நுழைந்து சென்று இருக்கிறார் என்பதும் என்று தெரிய வந்தது. உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகள் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், பி.சி.ஏ.எஸ் எனப்படும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் க்யூ பிரிவு அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு இந்த மர்ம ஆசாமி ஞானசே கரன் உள்ளே நுழைந்த கேட்டில் பாது காப்புப் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களிடமும் விசா ரணை நடத்தினர். ஆனால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம ஆசாமி ஞானசேகரன் டிராலியை தள்ளிக் கொண்டு நண்பர்க ளோடு சேர்ந்து உள்ளே வருவது தெளிவா கத் தெரிந்தது. இதை அடுத்து ஞானசேகர னைப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்ய தனிப்படை
சென்னை,ஜன.23- பல்லாவரம், திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண் ணைக் கொடுமைப்படுத்தி யதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது மகன் மற்றும் மருமகள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இவ்விருவரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர். திருவான்மியூர் பகுதி யில், பல்லாவரம் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ-வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லின் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வீட்டில் பணி புரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்துக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்யப்பட்ட தாக அவர்கள் வீட்டில் பணி புரிந்த சிறுமி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடியோ ஒன்று வெளியிட்டி ருந்தார். அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்து வமனை மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படை யில் நீலாங்கரை மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதி வாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகி யோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டுதல், அடித் தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மற்றும் அவரது மருமகள் மெர்லின் ஆகியோர் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப் பாக, கணவன் மனைவி இருவரும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், இவர்களைப் பிடிப்பதற் குத் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வா ளர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 18வது மாநாடு
வேலூர்,ஜன.23- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 18 வது மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அமுதா தலைமை வகித்தார். சர்வதேச அறிவியல் நிகழ்வுகள் குறித்த விவரங்களை கொண்ட நாட்காட்டியை அவர் வெளியிட, நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அறிவியல் சுயசார்பிற்கே, அறிவியல் மக்களுக்கே, அறிவியல் சமூக மாற்றத்திற்கு, அறிவியல் நாட்டிற்கே என்ற உறுதிமொழியை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். இல்லம் தேடி கல்வியை அனைவருக்கும் திறன் மேம்பாட்டு இயக்கமாக மாற்ற வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் நலம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக பே. அமுதா, செயலாளராக செ.நா.ஜனார்த்தனன், பொருளாளராக வீ.குமரன் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கைவினை கலைஞர்கள் தயாரித்த 111 அடி உயர ஊதுபத்தி
சென்னை,ஜன.23- உள்ளூர் கைவினை கலைஞர்கள்களின் திறனை பறைசாற்றும் விதமாக, இந்தியாவின் ஆக பெரும் ஊதுபத்தி தயாரிப்பாளரான சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனம் 111-அடி ஊதுபத்தி ஒன்றை உருவாக்கியுள்ளது. வானில் இனிய மணம் பரப்பும் பிரம்மாண்டத்தை அது மேற்கொண்டுள்ளது. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் மெய்சிலிர்க்க செய்யும் இந்நிகழ்வு அரங்கேறுகிறது. பல்வேறு வேறுபாடு கொண்ட கைவினை கலைஞர்கள் இதயபூர்வமாக ஒரு செயல்பாட்டில் தங்களை அர்ப்பணித்து கொண்டாடும் முகமாக மைசூரு, மகாராஷ்ட்ரா மற்றும் கோவா ஆகிய இடங்களில் இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சைக்கிள் பியூர் அகர்பத்தியின் 111-அடி உயர ஊதுபத்தி. மைசூரு கைவினை கலைஞர்களின் வளமான கலாசார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் ஒரு சிறந்த அணிகலன் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முளைக்காத விதை நெல் இழப்பீடு வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை,ஜன.23- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தராஜன் விவசாயிகளுக்கு வழங்கிய நெல் விதைகள் முளைப்பு வராததால் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து முறையான விசாரணை செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மாநகரப் பேருந்து மோதி பெண் பலி
அம்பத்தூர, ஜன.23- கொரட்டூர் 200 அடி சாலையில் இரு சக்கர வாகனம் மீது மாநகரப் பேருந்து மோதியதில், பெண் தலை நசுங்கி செவ்வாயன்று பலியானார். கொளத்தூர் பூம்புகார் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் உதவி மேலாளராகப் வேலை செய்கிறார். இவரது மனைவி வித்யா (35). இவர்க்ளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை வித்யா, தனது கணவர் மகேந்திரனை திருமங்கலத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விட்டு, மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இவர் கொரட்டூர் 200 அடி சாலையில் செல்லும் போது, அங்கு சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையடுத்து, வித்யா இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது கோயம்பேடு - செங்குன்றம் நோக்கி சென்ற மாநகரப் பேருந்து (தடம் எண். 114) வித்யாவின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வித்யா பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வித்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகார் பேரில் வழக்குப் பதிவு செய்து, புழல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர் ரமேஷ்குமார் (47) என்பவரை கைது செய்தனர்.