districts

சென்னை முக்கிய செய்திகள்

எம்ஐடி வடிவமைத்த 500 டிரோன்கள் இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியது

தாம்பரம்,நவ.18-  சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கும் முனைவர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 500 ஆளில்லா டிரோன்கள் இந்திய ராணுவம் பயன்படுத்ததொடங்கியது. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதிகள் மற்றும் மலை பகுதி களில் எளிதாக அணுக முடியாத இடங்க ளில் இந்த டிரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது. கடந்த வாரம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் இந்தோ திபெத் எல்லை காவல் படையின் 62-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, இந்த டிரோன் வடிவமைத்த குழுவை பாராட்டினார். இந்த ஆளில்லா விமானங்கள் கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும் போது கூட பயன்படுத்த முடியும். 1 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று பறக்கக்கூடிய இந்த டிரோன்கள், ஒரு சுற்றில் சுமார் 20 கிலோமீட்டர் வரை இயக்க முடி யும். புவியிடங்காட்டி எனப்படும் ஜி.பி.எஸ்.பயன்படுத்திய இந்த குழு, வழி செலுத்தல் எனும் தொழில்நுட்பம் மூலம் இந்த விமானங்களை இயக்குவது சிறப்பு அம்சமாகும். இந்த ஆளில்லா விமா னங்களின் எடை சுமார் 100 கிலோ ஆகும், மற்றும் இவை 15 முதல் 20 கிலோ மருந்துகள், உணவு பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எடுத்து செல்லும் திறன் கொண்ட வையாகும். அருகாமையில் இருக்கும் சென்சார் மூலம் சுலபமாக தரைக்கு திரும்ப இந்த விமானங்களை இயக்க முடியும். தரையில் திரும்பி வந்த உடன் சில நிமிடங்களிலேயே ஆர்மிங் சுவிட்ஸ் எனும் கருவி தயார் நிலைக்கு வந்த உடன், இந்த ஆளில்லா விமானத்தை மறுபடியும் இயக்க வைக்க முடியும். உயர்ந்த மலை பகுதி கள், அடர்ந்த காடுகள், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலை பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகமாக உள்ள பொக்ரானில் இந்த ஆளில்லா விமானிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஆளில்லா விமானங்கள் அவசர அறுவை சிகிச்சைக்காகவும், உடல் உறுப்புகள் மற்றும் அறிய வகை ரத்தம் மற்றும் குரு தித்திரவவிழையம் விரைவாக எடுத்து செல்லவும் இந்த மையம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

 மாமல்லபுரம் புராதன சின்னங்களை  இன்று கட்டணமின்றி  பார்க்கலாம்

செங்கல்பட்டு,நவ.18- நவ 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து அந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது. மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான ஞாயிறன்று ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்

சென்னை, நவ.18 வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, இன்புளுயன்சா காய்ச்ச்சல், அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி வரும் 30ஆம்  தேதி வரை  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை முகாம் நடத்தப்பட்டு வருகிறது..  ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் 476 மருத்துவ நடமாடும் குழுக்களும் வாகனங்களின் மூலம் பள்ளிச்சிறார்களுக்கான முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4வது வாரம் நொச்சிக்குப்பம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம்  25ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.

ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்:காவலர் கைது

சென்னை, நவ. 18- சென்னையில் ஓடும் ரயிலில் பெண் முன் அமர்ந்து ஆபாசமாக நடந்துகொண்ட காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை மின்சார ரயிலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணின் முன் நபர் ஒருவர் அமர்ந்துகொண்டு ஆபாச செயலில் ஈடுபட்டார்.இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், துணிச்சலுடன் அந்த நபரை வீடியோ எடுத்தார். வீடியோ எடுப்பதை கண்ட அந்த நபர், பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி ஓட்டம் பிடித்தார். இது தொடர்பாக கடந்த 14-ந்தேதி அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது தாம்பரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றிவந்த இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன், பெண் முன் மோசமான பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனை தொடர்ந்து, கருணாகரனை கைதுசெய்த தாம்பரம் ரயில்வே போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

6 உதவிஆய்வாளர் உட்பட 16 பேர்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை,நவ.18- சென்னையில் பல்வேறு காவல்நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.  இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் அது உறுதியானது. இதை தொடர்ந்து சென்னையில் 6 உதவிஆய்வாளர், 2 தலைமைக்காவலர்கள், 14 போலீசார் என 22 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆணையர்  சந்தீப்ராய் ரத்தோர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

‘யுஇஎப்ஏ யூரோ 2024’: கால்பந்து  ரசிகர்களுடன் கொண்டாடும் விவோ

சென்னை, நவ.18- உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ‘யுஇஎப்ஏ யூரோ2024’ கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு கோடை மாதம் ஜெர்மனியில் நடைபெறவுள்ளது.  இந்த போட்டிகளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விவோ இப்போதே தயாராகி விட்டது. விவோ தனது அதி நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை உலகளாவிய கால்பந்து அரங்கில் வெளிப்படுத்து  உள்ளது. போட்டியை காணவுள்ள ரசிகர்கள் எடுக்கும் புகைப்பட அனுபவங்களை நேர்த்தியான தொழில்முறை கலைஞர்கள்போல் மேம்படுத்தும் வகையில் அதிநவீன கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களையும் விவோ அறிமுகம் செய்துள்ளது. 

30வயது இளைஞருக்கு  சிக்கலான அறுவை சிகிச்சை

சென்னை,நவ.18- ஆண்குறி முறிவு ஏற்பட்ட 30 வயது இளை ஞருக்கு சென்னையில் உள்ள ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை  (ஏஐஎன்யு)  சிக்கலான அறுவை சிகிச்சையை செய்துமுடித்துள்ளது. அந்த இளைஞருக்கு ஆணுறுப்பில் ஏற்பட்ட பிரச்சினையை கண்டறிந்து அதை சரி செய்வதற்காக ஏஐஎன்யு மருத்துவ மனையின் யூராலஜி மற்றும் ஆண் பாலியல் மலட்டுத்தன்மை (ஆன்ட்ராலஜி) மருத்துவ நிபுணர் டாக்டர் சஞ்சய் பிரகாஷ் தலைமையிலான டாக்டர்கள் குழு ஆணுறுப்பின் உட்புற சேதத்தை கண்ட றிந்து அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சையை அளித்தனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அந்த வாலிபர் அறுவை சிகிச்சை முடிந்த 36 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார்.  இது குறித்து டாக்டர் சஞ்சய் பிரகாஷ் கூறுகையில், ஆண்குறி முறிவு ஒரு அறுவை சிகிச்சை அவசரநிலை ஆகும். இதில் உடனடியாக கவனம் செலுத்துவது அவ சியம் என்றார். இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை யூராலஜி / ஆன்ட்ராலஜி நிபுணர்கள் மேற்கொள்வது மிகவும் முக்கி யம் ஆகும். ஏனெனில் அவர்களுக்கு ஆணுறுப்பின் உடற்கூறியல் மற்றும் செயல்முறைகள் நன்கு தெரியும். எந்த வித பிரச்சினையும் இல்லாமல் அதன் செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு அவர்களால் கொண்டுவர முடியும் என்றும் அவர்  தெரிவித்தார்.

அம்பத்தூரில் பேருந்து நிலையம் ரூ.13.85 கோடியில் நவீனமாகிறது

சென்னை,நவ.18- அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், பூந்தமல்லி, திருபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைபார்த்து வரு கின்றனர். இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, பூந்தமல்லி, சென்ட்ரல், எழும்பூர், அண்ணா சாலை போன்ற பகுதி களுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதன் அருகே போக்குவரத்து பணிமனையும் உள்ளது. இந்த நிலையில் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.150.05 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு வெள்ளி யன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் அம்பத்தூர் பஸ்நிலையத்தை ரூ.13.85 கோடியில் மேம்படுத்தும் பணிகளும் நடக்க உள்ளது. இதற்கு பொது மக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள அம்பத்தூர் பஸ் நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு நவீன வசதி களுடன் அமைய இருக்கிறது. மாநகர பஸ்கள் உள்ளே செல்லவும், வெளி யேவரவும் தனித்தனி பாதை, நேரக்காப்பாளர் அறை, கழிப்பிட வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படஉள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட இருக்கிறது.

ஆசிரியர் நியமன தேர்வுக்கு இலவச பயிற்சி

விழுப்புரம்,நவ.18- விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழ், ஆங்கிலம், கணி தம், இயற்பியல், வேதியி யல், விலங்கியல், தாவரவி யல், வரலாறு மற்றும் புவி யியல் போன்ற பாடங்க ளுக்கான பட்டதாரி ஆசி ரியர் பணிக்கு தோராயமாக 2,222 ஆசிரியர் பணி காலி யிடங்களுக்கான போட்டித் தேர்வு 7.01.2024 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு விழுப்பரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் 22.11.2023 அன்று காலை 10 மணி அளவில் துவங்கப்பட வுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கெனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 9499055906 என்ற அலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ பதிவு செய்துகொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர்  பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.