சென்னை, ஆக.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகாரையடுத்து 3 இடங்களில் இருந்து 45 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டமும் நடத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு: விருகம்பாக்கம் பகுதி, 138 வது வட்டம், சத்திய மூர்த்தி பிளாக், மேற்கு ஜாபர்கான்பேட்டை, ஜான் கென்னடி தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்ப தாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து சிபிஎம் விருகம் பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில், சிஐ டியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த வர்கள் வியாழனன்று (ஆக.29) அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக காவல் துறைக்கும், உணவுப் பொருள் வழங்கல் துறைக்கும் தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த சைதாப்பேட்டை உணவு பொருள் வழங்கல் பாது காப்பு துறை உதவி ஆணை யர் ராகிணி ரவிச்சந்திரன், எம்ஜிஆர் நகர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் வீட்டை சோதனையிட்டு 20 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதேபோல், எம்ஜிஆர் நகர் கண்ணகி தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 20 மூட்டை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். 137 வது வட்டம், எம்ஜி ஆர் நகர், சங்கரலிங்கனார் தெருவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இடத்தில் உள்ள ஒரு தொழிற்கூடத்தில், மாவு அரைத்து விற்பனை செய்யும் நபரிடம் இருந்து 5 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த 3 இடங்களில் 45 மூட்டை அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்யாமல், விசா ரணை செய்வதாக கண் துடைப்பு நாடகம் நடத்தி னர். இதனை கண்டித்து எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ரேசன் அரிசி பதுக்கல்காரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேசன் கடை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோதமாக மாவு அரைத்து விற்கும் தொழில் நடத்தும் நபரின் தொழிற்கூட உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்,ரெங்கசாமி, வாலிபர் சங்கத்தின் பகுதிச் செய லாளர் மணிமாறன், பொரு ளாளர் கார்த்தி, மாதர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் டி.விஜய குமாரி, மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், அரிசி கடத்தல் கும்பலை விரைந்து கைது செய்வ தாகவும், ஊழியர்கள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.