சென்னை,செப்.13- சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை (செப்.14) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06163) ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கட்கிழமை (16-ந்தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்கள் பெரம் பூர், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, ஷொரனூா், திரூர், கோழிக் கோடு, வடகரை வழி யாக இயக்கப்படும என்று தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.