districts

img

புவனகிரி அருகே 250 ஏக்கரில் தேங்கி நிற்கும் மழை நீர்

சிதம்பரம், நவ.29- புவனகிரி அருகே முத்து கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 250 ஏக்கர் விளை நிலத்தில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம் பகுதியில், இரண்டு நாட்க ளுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில், சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள முரட்டு வாய்க்காலில் மழை நீர் அதிக அளவில் செல்வதால் வயல் தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ளது. இதனால் சம்பா  பயிர் மழை நீரில் மூழ்கி  அழுகும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். “முரட்டு வாய்க்கால் வடிகால், வாய்க்கால் முழுவ தும் ஆகாயத் தாமரை பரவி இருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மழை காலத்திற்கு முன்னரே நீர்வளத்துறை அதிகாரிகள் அதனை அகற்றி இருக்க வேண்டும். கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் பயிர்கள் இது போல மூழ்கினால் என்ன செய்வது?” என்று இப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு  நடவடிக்கை எடுக்க  வேண்டும்”என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்களை அதிக அளவில் மழை நீர்  செல்வதால் வயல்களில்  இருக்கும் தண்ணீர் வடிவ தற்கு காலதாமதமாகிறது. இடையே வெயில் அடித்து  வருகிறது. இன்னும் 2 நாட்களில் முழுவதும் வடிந்து விடும் என்று  அதிகாரிகள் எதிர்பார்க் கின்றனர்.