கொச்சி, செப். 10- அனிமேஷன், விஎஃப்எக்ஸ், கேமிங் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியா லிட்டி (ஏவிஜிசி, எக்ஸ்ஆர்) துறையில் கேரளாவை உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை ஆவணத்தின் வரைவு தயாராக உள்ளது. இந்தத் துறையில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு களை நோக்கமாகக் கொண்டு கொச்சியில் மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டது. அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதி களில் திருவனந்தபுரத்தில் நடை பெறும் உச்சி மாநாட்டில் வரைவு கொள்கை வெளியிடப்படும் என்று திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவர் ஷாஜி என் கருண் செய்தியாளர்களி டம் தெரிவித்தார். அனிமேஷனில் உலகளாவிய முதலீட்டில் கேரளாவின் பங்கு ஒரு சதவீதம் மட்டுமே. இத்துறை யில் 10 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் என ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. அதில் 20 சதவிகிதத்தை கேரளம் பெறவும் இத்துறையில் திறன்களை வளர்க்கவும் மாநில அரசு இலக்கு தீர்மானித்துள்ளது. தற்போது இத்துறையில் சுமார் இரண்டு லட்சம் நிபுணர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். சர்வதேச தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனிமேஷன் வி எஃப் எக்ஸ் நிறுவனங்கள் கேரளாவில் முதலீடு செய்ய விரும்பு கின்றன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஷாஜி என் கருண்.