விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் கடத்தல்
பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப சுங்கத்துறை திட்டம்
சென்னை, ஜூலை 20- சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடிமதிப்பிலான 267 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுங்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலை யில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவ ருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சபீர் அலி கடை நடத்து வதற்கு விமான நிலைய ஆணை யத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்த தாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனை ஊழியர் தற்கொலை
சென்னை, ஜூலை 20- திருவள்ளூர் மாவட்டம் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 25). இவர் சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையில் மாவுகட்டு போடும் பிரிவில் தற்காலிக ஊழியராக பணி புரிந்து வந்தார். ஆகாஷ் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், அண்மையில் வேலை நிமித்தமாக அபுதாபிக்கு சென்றார். அபிதாபிக்கு சென்ற பின்னர், அவர் ஆகாஷிடம் சரியாக பேசவில்லை என தெரிகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அந்த பெண், கைப்பேசி மூலம் ஆகாஷை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றவே ஆகாஷ், கைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டு, அங்குள்ள தனது அறைக்குச் சென்று விட்டார். சந்தே கமடைந்த அந்த பெண், ஆகாஷின் நண்ப ரிடம் நடந்ததை கூறி யுள்ளார். உடனே அவர் ஆகாஷ் வேலை செய்யும் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி, ஜூலை 20- பருவகால நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுதியுள்ளார். மழைக்கால நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், கொசுக்களின் மூலம் பரவும் பருவகால நோய்களான காய்ச்சல், தண்ணீர் மூலம் பரவக்கூடிய வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏதும் ஏற்படாமல் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், குடிநீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் சுத்தப்படுத்தி தினசரி பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யுவும், கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக கழுவி கொசு புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முந்திரி கொள்முதலில் ஒரு கோடி மோசடி: இளம்பெண் சிறைபிடிப்பு
கடலூர், ஜூலை 20 - பண்ருட்டியில் விவசாயிகளிடம் முந்திரி பருப்பு கொள்முதல் செய்ததில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை விவசாயிகள் சிறை பிடித்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வினோலியா (25). இவர் அதே பகுதியில் பல்வேறு முந்திரி விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக முந்திரி பருப்புகள் கொள்முதல் செய்து டன் கணக்கில் ஏற்றுமதி செய்து வந்த தாகக் கூறப்படுகிறது. ஆனால் முந்திரி கொள்முதல் செய்த தற்கான பணத்தை வழங்கா மல் விவசாயிகளை அலைக் கழித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், வியாபாரிகள் இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தி லும், காடாம்புலியூர் காவல் நிலை யத்திலும் புகார் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வினோலியா தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சனிக்கிழமை தனது சொந்த ஊருக்கு வந்த வினோலியாவை விவசாயிகள், வியாபாரிகள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வினோலி யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கவுன்சிலர் கைது
அதிமுக கவுன்சிலர் கைது சென்னை,ஜூலை 20- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலை யில், 16வது நபராக திரு வள்ளூர் மாவட்டம் கடம் பத்தூர் அதிமுக கவுன்சி லர் ஹரிதரன் கைது செய்யப் பட்டுள்ளார். வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப் பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் கள் இவரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளன.