districts

மெட்ரோவில் 1.30 கோடி பேர் பயணம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுபாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கியது. அப்போது தொடங்கி கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை 6 மாதத்தில் 1 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 833 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த மாதம் 1ஆம் தேதியில் இருந்து கடந்த 30 ஆம் தேதி வரை மட்டும் மொத்தம் 29 லட்சத்து 24 ஆயிரத்து 148 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த மாதம் 25ஆம் தேதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 177 பயணிகள் பயணம் செய்தனர். மேற்கூறிய தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

;