சீர்காழி, ஜன.28- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்த விவசாயிகள் தற்போது தீவிர அறுவடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர். வருடந்தோறும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வகையில் வெள்ளிக்கிழமை கொள் ளிடம் பகுதியிலுள்ள கடவாசல், பழைய பாளையம், புதூர், மாதானம், கோதண்டபு ரம், கொள்ளிடம், நல்லூர், ஆலங்காடு, எட மணல், மாதிரவேளூர், திருமயிலாடி உள்ளிட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பங்குபெற்று விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். கொள்ளி டம் அருகே உள்ள மாதிரவேளூர் கிராமத்தில் வியாழனன்று திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி மரக்காலில் நெல்லை அளந்து கொள்முதல் செய்யப்பட்டது. உரிய நேரத்தில் கிராமப் பகுதிகளில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.