திருப்பூர், அக். 2 - திருப்பூர் நகரின் வடக்குப் பகுதியில் இளைஞர்கள், மாணவர்கள் உடல் நலம் ஆரோக்கியத்தை பேணும் வகையில் அனைத்து வகை விளையாட்டு சாதனங்கள், உபகரணங்களுடன் விளையாட்டு மைதா னங்களை அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடைபய ணப் பிரச்சார இயக்கம் நடத்தி கோரிக்கை வைத்தனர். திருப்பூர் வடக்கு மாநகரில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணப் பிரச்சாரம், பொதுக் கூட்டம் ஞாயிறன்று நடத் தப்பட்டது. வடக்கு மாநகரின் கிழக்குப் பகுதி யில் கருமாரம்பாளையத்தில் இருந்து ஒரு குழுவும், மேற்குப் பகுதியில் சாமுண்டிபுரம் எம்ஜிஆர் நகரில் இருந்து ஒரு குழுவும் புறப்பட்டு வடக்குப் பகுதியில் பல்வேறு மக் கள் குடியிருப்புகள் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் சென்று மாலையில் கும ரானந்தபுரம் சிவன் தியேட்டர் சந்திப்பு அருகே சங்கமித்தனர். கருமாரம்பாளையத்தில் தொடங்கிய நடைபயணக் குழுவுக்கு வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகரச் செயலாளர் விவேக் தலைமை வகித்தார்.
இதில் 60 இளைஞர்கள் கைகளில் வெண் கொடியுடன் பங்கேற்றனர். இந்த நடைபயணப் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் வாழ்த்திப் பேசி தொடக்கி வைத்தார். இந்த குழுவினர் கோல்டன் நகர், பி.என்.பாளை யம், ரங்கநாதபுரம், ஏகேஜி நகர், அம்பேத் கார் நகர், நெசவாளர் காலனி, திருமலை நகர், எஸ்.வி.காலனி, குமரானந்தபுரம் ஆகிய பகு திகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் சாமுண்டிபுரம் எம்ஜிஆர் நகரில் வாலிபர் சங்க நடைபயணக் குழுவை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் வாழ்த்திப் பேசி தொடங்கி வைத்தார். இந்த குழுவில் வாலி பர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பிரவீன், வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் சந்துரு ஆகியோர் தலைமையில் 74 பேர் வெண் கொடியுடன் கலந்து கொண்டனர். இக்குழுவி னர் சாமுண்டிபுரம், பழனிச்சாமி நகர், வ.உ.சி. நகர், ஜி.கே.லேஅவுட், சரளைக்காடு, காலேஜ் ரோடு, ஓடக்காடு, முருங்கப்பாளை யம், அண்ணா காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து குமரானந்தபுரம் வந்த டைந்தனர். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்: ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ள வேண்டும், பனியன் தொழிலுக்கு மூலப்பொருளாக உள்ள பருத்தியை அத்தி யாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும், திருப்பூரில் இளைஞர்க ளைச் சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக் கத்தைக் கட்டுப்படுத்த அரசு கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், மாநகரின் வடக்குப் பகுதியில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்க வேண்டும். நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச் சைக்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்த குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பயிற்சி பெற்ற ஊழியர்களை நிய மித்து,
அளிக்கப்படும் சிகிச்சை விபரத்தை அறிவிப்புப் பலகையில் வைக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் அனைத்து பேருந்து நிலையங்களையும் இணைக்கக்கூடிய வகையிலும், கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளையும் முழுமையாக இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்குப் பகுதியில் மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங் கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்கூட்டத்தில் வாலிபர் சங்கத் தின் வடக்கு மாநகரச் செயலாளர் எஸ்.விவேக், மாவட்டத் தலைவர் எஸ்.அருள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் ஆகியோர் உரையாற்றினர். முன்ன தாக மாநகரத் துணைத் தலைவர் க.சரத்கு மார் தலைமை ஏற்றார். வரவேற்புக்குழுச் செயலாளர் எம்.ஜீவானந்தம் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கு.பாலமுரளி உள் பட வாலிபர் சங்க மாநகர நிர்வாகிகள் பங்கேற் றனர். முடிவில் மாநகரக்குழு உறுப்பினர் நா. சந்துரு நன்றி கூறினார்.