ஈரோடு, நவ.10- அந்தியூரில் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்து தலைமறைவான கும்பலை கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவரது தாயார் லதா சுப்பிர மணியம், இளங்கதிர் ஆகியோர் சன் பேமிலி க்ளப் என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள், பல்வேறு தரப்பி னரை ஏமாற்றி, பலகார சீட்டு, ஏல சீட்டு நடத்தி சுமார் ரூ.20 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்து தலைமறை வாகினர். இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது வரை கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை யடுத்து, மோசடியில் ஈடுபட்ட சன் பேமிலி கிளப் நிறுவனத் தைச் சேர்ந்தோரை உடனடியாக கைது செய்ய வலியு றுத்தி, வாலிபர் சங்கத்தினர் அந்தியூர் சன் பேமிலி கிளப் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா பொறுப்பாளர் எஸ்.செபாஸ்டியன் தலைமை ஏற்றார். இதில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், தாலுகாச் செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் ஆர்.முருகேசன், விச மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, மாதர் சங்க தாலுகாச் செயலாளர் எஸ்.கீதா, சிஐடியு செயலாளர் கே.ஏ.குருசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.