சேலம், மே 29- மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் அசத்திய இளம் வீரர்கள் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு நிதியுதவி அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அனல் மின்நிலையத்தின் சிஐடியு கிளைத் தலைவர் கே.சண்முகம். இவ ரது பேத்தி வி.பி.தனுஷ்யா (11). தனுஷ்யா மற்றும் எஸ்.அஸ்வின்(10), ஆகியோர் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் அஸ்வின் இரண்டாமிடமும், தனுஷ்யா மூன்றாமிடமும் பிடித்தனர். இந்நிலையில், போட்டியில் வென்ற பதக்கம் மற்றும் கோப்பைகளுடன் இருவரும் சிஐடியு மேட்டூர் அலுவல கத்திற்கு வந்து தலைவர்களிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது தனுஷ்யா மற்றும் அஸ்வின் ஆகி யோர், சென்னை அயனாவரத்தில் சிஐ டியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.1000 நிதியுதவி அளித்தனர். மேலும், தனது சிறுசேமிப்பு நிதியில் இருந்து மாதந் தோறும் ரூ.100 நிதி வழங்குவதாக தனுஷ்யா உறுதியளித்துள்ளார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் வீ.இளங்கோ, மாவட்டப் பொருளாளர் செ.கருப்பண்ணன், மாவட்ட நிர்வா கிகள் எஸ்.செல்வகணபதி, கே.சண்மு கம், எல்.செல்வநாதன், எல்.சுவாமிநா தன் ஆகியோர் பரிசுப்பெற்ற இளம் வீரர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்தனர்.