districts

img

உலக வனநாள் விழிப்புணர்வு பேரணி

கோவை, மார்ச் 21- உலக வன நாள் மார்ச்  21 ஆம்தேதி கொண்டா டப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக உலக வனநாள் விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி செவ் வாயன்று துவக்கிவைத்தார். உலக வன நாளை யொட்டி கோவையில் பல் வேறு இடங்களில் வனத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை  மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து “காடு களை காப்போம் நல்ல எதிர்காலத்தை உரு வாக்குவோம்” என்கிற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி யில் கலந்து கொண்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வன நாள் குறித்தும்,  வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண் டனர். இந்நிகழ்வில் அரசு கலைக் கல்லூரி  முதல்வர் உலகி,  கோவை மாவட்ட வனத் துறை அலுவலர் அசோக் குமார் உட்பட வனத்துறையினர் உடனிருந்தனர்.  முன்னதாக, கல்லூரி மைதானத்தில் வன  நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர், கல்லூரி முதல்வர் மரக்கன்றுகளை நட் டனர்.