சேலம், பிப்.9- சேலத்தில் தனியார் மருத்துவமனையின் சார்பில், உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், விநாயகா மிஷனின் (விம்ஸ்) மருத் துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லும், புதிய பேருந்து நிலையத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடைபெற்றன. புகைப்பட கண்காட்சியினை துணை ஆட்சியர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) ஜெக நாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப் பாளர்களாக கலால் அலுவலகத்தின் உதவி ஆணையர் மாறன், துறையின் முதல்வர் செந்தில்குமார், வட்டாட்சியர் ரமேஷ், கதிரியக்கவியல் பிரிவின் பொறுப்பாளர் கலை வாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், ஷனிகா, கார்த்திக்ராஜா, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.