districts

img

வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்ட புள்ளிமான்கள் வனப்பகுதியில் விடுவிப்பு

கோவை, மே 13- கோவை வஉசி பூங்காவில் பராம ரிக்கப்பட்டு வந்த 26 புள்ளி மான்கள்,  தலைமை வன உயிரின பாதுகாவல ரின் ஆணைப்படி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.  கோவை மாநகரின் மையப் பகுதி யில் வஉசி உயிரியல் பூங்கா அமைந் துள்ளது. கோவை மாநகரில் உள்ள  முக்கிய பொழுதுபோக்கு அம்சங்க ளில் ஒன்றாக இந்த பூங்கா செயல் பட்டு வந்தது. இங்கு மான்கள், பற வைகள், முதலை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வந் தன. இந்த உயிரியல் பூங்காவிற்கு அங்கீகாரத்தை நீட்டித்து வழங் கக் கோரி கோவை மாநகராட்சி சார் பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசுக்கு விண்ணப் பிக்கப்பட்டது. ஆனால் போதிய கட்ட மைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி,  அங்கீகாரம் வழங்க ஒன்றிய உயிரி யல் ஆணையம் அனுமதி மறுத்தது.    இதையடுத்து, கோவை வஉசி  உயிரியல் பூங்காவில் பராமரிக்கப் பட்ட வந்த விலங்கினங்களை இட மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு  செய்தது. அதன்படி 530க்கும் மேற் பட்ட உயிரினங்கள், வண்டலூர் உயி ரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய் யப்பட்டன. அதன்படி பெலிக்கான் பறவைகள், பாம்புகள், முதலை மற் றும் மான்கள் ஆகியவை அவற்றின்  இயற்கையான உயிரியல் சூழலில்  விடப்படும் என முடிவு செய்யப்பட் டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  பாம்புகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வஉசி பூங்கா வில் பராமரிக்கப்பட்ட வந்த புள்ளி  மான்களுக்கு மருத்துவ பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு, அவற் றுக்கு காசநோய் தொற்று இல்லை என அறிக்கை பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்களன்று 26 புள்ளி மான்கள், வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு விடுவிக்கப்பட்டது. இந்த மான்களின்  நடமாட்டத்தை கண்காணிக்கவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.

;