ஈரோடு, டிச.23- பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத் துறையினர் பட்டாசு வெடித் துத் துரத்தினர். ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் புலிகள் காப் பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங் களில் புகுந்து விவசாயிகள் பயிரிட் டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பவானிசாகர் வனச் சர கத்துக்கு உள்பட்ட புதுப்பீா்கடவு வனப் பகுதியில் இருந்து வியாழனன்று வெளி யேறிய காட்டு யானைக் கூட்டம் பசுவ பாளையம் கிராமம் அருகே தனியா ருக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்து அப்பகுதியில் முகாமிட்டன. யானைக்கூட்டம் கிராமத்தின் அருகே நடமாடுவதைக் கண்ட மக்கள் அச்ச மடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பவானி சாகர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த வனத் துறையினர் கிராமத்தின் அருகே முகா மிட்டிருந்த யானைகளை பட்டாசு வெடித்தும் ஹாரன் ஒலி எழுப்பியும் ஒரு மணி நேரம் போராடி அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர்.