districts

சாரல் மழையில் குட்டிகளுடன் நீர் அருந்திய காட்டுயானைகள்

கோவை, மே 21- சாரல் மழையில் நனைந்தபடி குட்டிகளுடன் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகளின் காட்சி  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் தற்பொழுது கோடை மழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகி றது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய் யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, கோவை நீலகிரி ஈரோடு உட்பட பல்வேறு மாவட் டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை  மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாள்தோ றும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து  வருகிறது. இந்நிலையில், கோவையை ஒட்டியுள்ள மலை கிராமம்  ஒன்றில் காட்டு யானைகள் சாரல் மழையில் நனைந்தபடியே  தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தும் காட்சிகள் தற்பொ ழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

;