districts

img

குடிநீர், தெரு விளக்கு பணிகள் துரிதகதியில் நிறைவேற்றம் - மேயர் ந.தினேஷ்குமார்

திருப்பூர், மே 30 - திருப்பூர் மாநகரில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து இரண்டு மாதம் ஆன நிலையில் குடிநீர், தெரு விளக்கு, சாலை  உள்ளிட்ட அடிப்படை பணிகள் பெருமளவு நடைபெற்றுள்ள தாக மாநகர மேயர் ந.தினேஷ்குமார் கூறினார். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாயன்று மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநக ராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் ஆர்.பால சுப்பிரமணியம், மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும்  வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேயர் ந.தினேஷ் குமார் கூறுகையில், திருப்பூரில் 1, 2 மண்டலங்களில் 4238 தெரு விளக்குகள், 3, 4  மண்டலங்களில் 4755 விளக்குகள் மற்றும் மின் சிக்கனம் செய்யும் வகையில் 4443 சோடியம்  விளக்குகளை  எல்இடி விளக்குகளாக  மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 9  மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் கூடுதல் தேவை  இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு அங்கு கூடுதல்  விளக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள் ளும் நிறுவனம் காலதாமதம், பணி விதிமுறைகளை செயல் படுத்தாமல் மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும். நான்காவது குடிநீர் திட்டத்தில் 352 கிலோமீட்டர் நீளத் துக்கு குழாய்கள் பதிப்பு, குழாய் இணைப்பு பணிகள் விடு பட்டுள்ளன. ரூ.56 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக் கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பணி தொடங்கும். நான்காவது  குடிநீர் திட்டத்தில் இப்பணிகள் ஜூன் இறுதிக்குள்ளாக தொடங்கப்படும்.  தேசமடைந்த தார்ச்சாலைகளை சீரமைக்க மாநிலத்தில்  உள்ள 21 மாநகராட்சிகளில் அதிக நிதி பெற்றிருப்பது திருப்பூர் மாநகராட்சிதான். மொத்தம் 171 கிலோமீட்டர் நீள சாலை ரூ.99.80 கோடியில் புதுப்பித்து அமைக்கப்படும்.  

பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் முடி வடைந்துள்ளன. விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை  திட்டப் பணிக்காக ரூ.200 கோடியில் திட்டம் இரண்டு மாதங் களுக்குள்ளாக தொடங்கப்படும்.  நான்காவது குடிநீர் திட்டத்தின்படி தற்போது நான்கு நாட் களுக்கு ஒரு முறை குடிநீர் தாராளமாக வழங்கப்படுகிறது. மாநகரில் மொத்தம் உள்ள 70 மேல்நிலை நீர்த்தேக்கத்  தொட்டிகளில் தற்போது 43 தொட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. 12 மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானப் பணி  நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது.  தமிழ்நாட்டியே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதி, மக்கள் பங்களிப்பாக பெற்றுள்ளது திருப்பூர். இங்கு ஏப்ரல்  மாதம் வரை ரூ.66.95 லட்சம் வசூலிக்கப்பட்டு ரூ.1.80 கோடி  அளவுக்கு பணிகள் நடைபெற உள்ளது.

நகரில் போக்கு வரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நான்கு இடங்களில் பாலம்  அமைக்கப்படும். மாநகராட்சி நிர்வாகம் அமைந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கி இரண்டு மாதத்தில் மேற் கண்ட பணிகள் மிகத் துரிதமாகவும், முனைப்போடும் செயல் பட்டுள்ளது. இவ்வாறு மேயர் ந.தினேஷ்குமார் கூறினார். ரூ.10 கோடி மண்டல நிதி வழங்க கோரிக்கை இக்கூட்டத்தில் பேசிய நான்காவது மண்டலத் தலைவர்  இல.பத்மநாபன், பழைய பேருந்து நிலைத்திற்கு டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் என பெயர் வைத்த பிறகும்  பேருந்துகளில் பழைய பேருந்து நிலையம் என்றே குறிப்பி டப்படுகிறது. இதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நான்காவது குடிநீர் திட்டத்தில் தற்போது கூடுதல் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும்படி செய்ய வேண்டும். மண்டலங்களுக்கு கூடுதல்  நிதி ஒதுக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பேசிய அனைத்து கட்சிகளின் கவுன்சி லர்களும், நான்காவது குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு  நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கும்படி செய்தி ருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம், மேயருக்கு பாராட்டுத் தெரிவித்தனர். திடக்கழிவு மேலாண்மை கட்டணம் அதிகமாக நிர்ணயித்து வசூலிப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின் முடிவில் முன்வைக் கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மனைப்பிரிவு களுக்கு அனுமதி வழங்குவது பற்றிய சில தீர்மானங்களில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். முந்தைய கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் மீண்டும் இக்கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற இரு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்தில் அந்த வார்டு கவுன்சிலர்கள் எழுப் பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு  தீர்மானமாக ஒத்திவைத்தால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும்  என்று மேயர், ஆணையர் கூறினர். தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்ட நிலையில் மூன்று மணி நேரம் நீடித்த மாமன்றக் கூட்டம் முடிவடைந்தது.